Tuesday, July 21, 2015

இந்திரா காந்தி காலத்து, எமர்ஜென்சி அடக்குமுறை தோற்றம் அப்பட்டமாக தெரிகின்றது.

இந்திரா காந்தி காலத்து, எமர்ஜென்சி அடக்குமுறை தோற்றம் அப்பட்டமாக தெரிகின்றது !

சன் குழும ஊடக அடக்குமுறைக்கு எதிராக, ஓரணியில் திரண்டு போராட வேண்டும் !

               இந்திய எதிர்க் கட்சி ஊடகங்களை குறி வைத்துப் பழி வாங்கும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க மத்திய அரசானது, 1975 ஆம் ஆண்டைய இந்திரா காந்தி  காலத்து,  அடக்குமுறை முறை   எமர்ஜென்சியை கையில்  எடுத்திருப்பதன்   தோற்றம் அப்பட்டமாக தெரி கின்றது.  இது,  இந்திய    நாடாளுமன்ற   ஜனநாயகத்தை
குலைக்கும்  கேடு  கெட்ட  செயலாகும்.    பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு, சர்வாதிகார மோடி  தலைமையிலான  மத்திய அரசின்  சீர்கேடான போக்கிற்கு     முற்றுப்புள்ளி  வைக்க   போராடினால் மட்டுமே  ஜனநாயகம் காப்பாற்றப்படும்

         சி.பி.எம்.என் - புதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்   தேசிய   பொதுச்   செயலாளர்    டாக்டர். ஏ. ரவீந்திரநாத் கென்னடி அவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். 

         

Monday, July 20, 2015

சன் குழும ஊடக அடக்குமுறைக்கு எதிராக, ஓரணியில் திரண்டு போராட வேண்டும் !

சன் குழும ஊடக அடக்குமுறைக்கு எதிராக, ஓரணியில் திரண்டு போராட வேண்டும் !

             சன் குழுமத்திற்கு எதிராகவும், பத்திரிக்கை, ஊடக சுதந்திரத்தை நசுக்கவும், புதிய எமர்ஜென்சியை உருவாக்கியுள்ள ஆளும் பா.ஜ.க  மத்திய அரசின், சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த ஊடக அடக்குமுறைக்கு எதிராக, ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நின்று போராட வேண்டுமென்றும், சி.பி.எம்.என் - புதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர். ஏ. ரவீந்திரநாத் கென்னடி அவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.